search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் செயின் பறிப்பு
    X

    பெண்ணிடம் செயின் பறிப்பு

    • மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரண்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
    • மர்ம நபர்கள் செயினை பிடித்து இழுத்ததில் கையில் வந்த 2 பவுனோடு தப்பி சென்று விட்டனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வர்கண்ணன். இவரது மனைவி மனைவி சரண்யா.

    இவர் தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரண்யா வின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி யடைந்த சரண்யா செயினை பிடித்து கொண்டார்.

    இருந்தாலும் மர்ம நபர்கள் செயினை பிடித்து இழுத்ததில் கையில் வந்த 2 பவுனோடு தப்பி சென்று விட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×