search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கல்லணை கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி நீர்
    X

    தஞ்சை கல்லணை கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி நீர்

    • கல்லணை கால்வாயில் இருபுறமும் கரைகளை தொட்டபடி ஆர்ப்பரித்துக் கொண்டு காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் கால்வாய் நீருடன் மழை நீரும் சேர்ந்து ஓடுகிறது.

    தஞ்சாவூர்:

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகள் நிரம்பி உள்ளன.

    இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 1 லட்சத்து 51 ஆயிரத்து 893 கன அடியாக அதிகரித்தது.

    இது நேற்றைய விட அதிகமாகும்.

    இதையத்து கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 4812 கன அடி, வெண்ணாற்றில் 3010 கன அடி, கல்லணை கால்வாயில் 2017 கன அடி, கொள்ளிடத்தில் 52105 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக கல்லணை கால்வாயில் இருபுறமும் கரைகளை தொட்டபடி ஆர்ப்பரித்துக் கொண்டு காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தஞ்சையில் கல்லணை கால்வாயில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.

    இன்று தஞ்சையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கல்லணை கால்வாயில் காவிரி நீருடன் மழை நீரும் சேர்ந்து ஓடுகிறது.

    Next Story
    ×