search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    காவிரி கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

    • காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை அதிகம் பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
    • மேலும் ஆற்றங்கரை யோரம் வசிக்கும் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படு த்தப்பட்டது.

    குமாரபாளையம்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை அதிகம் பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று மாலை முதல் உபரி நீர் அனைத்தும் வெளியேற்றப்படுகிறது.

    இதனால் குமாரபாளை யம் காவிரி கரையோர பகுதியில் படிக்கட்டுக்கு மேலே ஏறிய நிலையில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. அதனால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்ச ரிக்கை விடுக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் ஆற்றங்கரை யோரம் வசிக்கும் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படு த்தப்பட்டது.இது குறித்து வருவாய்த்துறையினர் கூருகையில், காவிரியில் அதிக நீர் வந்து கொண்டி ருப்பதால் கலெக்டரின் உத்தரவின் பேரில், கரை யோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு செல்ல வேண்டி கூறி வருகிறோம். மேலும் தங்குவதற்கு தேவை யான இடங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நாங்களும், நகராட்சி பணியாளர்களும் தீவிர கரையோர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினர்.

    மேலும் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரியில் நீராட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றில் பொதுமக்கள் இறங்காமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    Next Story
    ×