search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகள், முந்திரி மரங்கள் ஏலம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகள், முந்திரி மரங்கள் ஏலம்- கலெக்டர் தகவல்

    • குறிப்பிட்ட விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்கப்படும்.
    • ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டையில் உள்ள கால்நடை பெருக்கு பண்ணையில் கழிவு செய்யப்பட்ட பொலி காளைகள் 18 வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி மணி முதல் மதியம் 1 மணி வரை பண்ணை வளாகத்தில் ஏலமிடப்படுகிறது.

    இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் டேவணித்தொகை ரூ.30 ஆயிரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் துணை இயக்குனர், கால்நடை உயிரின பெருக்கு பண்ணை, ஈச்சங்கோட்டை என்ற பெயருக்கு வரைவோலை எடுத்து அவற்றுடன் ரேஷன்கார்டு, ஆதார்கார்டு நகல் ஆகியவற்றுடன் வருகிற 16-ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் கொடுத்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    வங்கி வரைவோலையில் குறிப்பிட்ட விண்ணப்ப தாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்கப்படும்.

    16-ந்தேதி மாலை 5 மணிக்கு பிறகு ஏலத்தில் கலந்து கொள்ள பதிவுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஏலம் முடிந்தவுடன் ஏலம் எடுத்த ஏலதாரர்கள் ஏலம் கோரிய முழு தொகைகையும் ரொக்கமாக செலுத்த வேண்டும்.

    குடிபோதையில் இருப்பவர்கள் ஏலத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள முடியாது.

    தவிர்க்க இயலாத காரணங்களால் ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் கலெக்டர் விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், தஞ்சை மாவட்டம் நடுவூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் 186 எண்ணிக்கையிலான பலன்தரும் மரங்களான முந்திரி மரங்களின் மகசூலினை 2023-2024 ஆகிய ஒரு ஆண்டிற்கான அனுபவம் செய்வதற்கான பொது ஏலம் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடுவூரில் உள்ள கால்நடை பண்ணையில் நடைபெற உள்ளது.

    ஏலம் அரசு விதிமுறைகளின்படி நடைபெறும்.

    ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வைப்புத்தொகையாக ரூ.10 ஆயிரத்துக்கு, தேசியமாயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலை, துணைஇயக்குனர், மாவடட கால்நடை பண்ணை, நடுவூர் என்ற பெயரில் எடுக்க வேண்டும்.

    ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் மற்றும் முகவரி தகவலுக்காக போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும். ஏல முன்வைப்புத்தொகை செலுத்தியவர்கள் மட்டுமே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    வரைவோலை 23-ந்தேதி காலை 20.20 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பெறப்படும்.

    ஏலம் எடுத்தவர்கள் முழுத்தொகையையும் உடனே செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×