சிறுமியை குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

பாலக்கோடு அருகே சிறுமியை குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது பதியப்பட்டுள்ளது.சமூக நல அலுவலர் புகாரின் பேரில் நடவடிக்கை.
சிறுமியை குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
Published on

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள புலிக்கரை- சென்னம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் பாலக்கோடு தாலுகா மோதுகுல அள்ளி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் பூவரசன் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்து இருப்பதாக பாலக்கோடு மகளிர் ஊர்நல அலுவலருக்கு வந்த புகாரின் பேரில் அவர் பாலக்கோடு் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 17 வயதான சிறுமி 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், வாலிபர் பூவரசனை காதலித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி வாலிபர் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது வாலிபர் சிறுமிக்கு தாலி கட்டியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து குழந்தை திருமண சட்டத்தின்படி வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com