தேனி அருகே அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்கு

பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாட்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

தேனி அருகே உள்ள நாகலாபுரம் தனியார் பள்ளி முதல்வராக இருப்பவர் செந்தில்குமார் (50). இவரது பள்ளியில் குப்பிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (வயது 39) என்பவரின் மகன் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளியில் அந்த மாணவருக்கும், சக மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து விசாரிப்பதற்காக அருண்பிரகாஷ் அந்த பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாட்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் அருண் பிரகாஷ் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அருண்பிரகாஷ் குமணன் தொழு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com