search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறுந்து கிடக்கும் இணையதள கேபிள் ஒயர்கள் சரிசெய்யப்படுமா?
    X

    அறுந்து தொங்கும் இணையதள சேவை கேபிள்கள்.

    அறுந்து கிடக்கும் இணையதள கேபிள் ஒயர்கள் சரிசெய்யப்படுமா?

    • வளர்ச்சி திட்டப்பணிகள் ஆகியவை இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்ட வருகின்றன
    • இணையதள சேவை முடங்கி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது

    மெலட்டூர்:

    தற்போது உள்ள நவீனகாலத்தில் எங்கும் இணையதள சேவை வசதி மிகவும் அத்தியாவசியமாக உள்ளது.

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி, ஊராட்சி களில் செயல்படுத்தப்படும் அனைத்து சேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆகியவை இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்ட வருகின்றன.

    இதற்காக அனைத்து ஊராட்களுக்கும் இணைய தள சேவைக்காக அரசு மூலம் பல கோடி ரூபாய் செலவில் புதியதாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஊராட்சிக்கும் கேபிள்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    தற்போது காவளூர் பகுதியில் இணைய தள சேவைக்காக அமைக்கப்பட்ட கேபிள்கள் அறுந்து விழுந்து பல நாட்களாக தரையில் கிடக்கிறது.

    இதனால் கிராம பஞ்சாயத்துகளில் இணை யதள சேவை முடங்கி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது அரச உடனடியாக நடவடிக்கை எடுத்து அறுந்து கிடக்கும் கேபிள்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×