புத்தகம் படிக்கும் பழக்கத்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்-அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

புத்தக கண்காட்சியை சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்ச்நதிரன் நேற்று நேரில் பார்வையிட்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புத்தக விழாவானது நடத்தப்பட்டு வருகிறது.
புத்தகம் படிக்கும் பழக்கத்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்-அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு
Published on

ஊட்டி,

ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இந்த புத்தக கண்காட்சியை சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்ச்நதிரன் நேற்று நேரில் பார்வையிட்டார். நிகழ்ச் சிக்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதா வது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோ சனைப்படி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து படிக்க ஆர்வம் மற்றும் பழக்கம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புத்தக விழாவானது நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் முதலாவது புத்தக திருவிழா நடந்து வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் பசியோடு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் காமராஜர் மதிய உணவு திட்டத்தினை கொண்டு வந்தார். அதன்பின்னர் சத்துணவு திட்டம் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். வாழ்வில் ஒரு மனிதனுக்கு கல்வி அறிவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். புத்தகம் படிப்பது என்பது மிகவும் அவசியம்.

அனைத்து வகை புத்தகங்கள் உள்ளன. இதில் அறிவு, கல்வி, தொழில் சார்ந்த புத்தகம் படிப்பது அவசியமாகும். இதில் எதை படிக்கின்றோமோ அதற்கேற்றார் போல நமது அறிவு வளர்வது மட்டு மின்றி தொழிலும் அமையும். எனவே தினமும் புத்தகம் படிக்கும் பழக்கத்தினை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் நம்மிடையே நினைவாற்றல் ஆனது அதிகரிப்பதோடு வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு வர முடியும்.

எனவே மாணவ- மாணவிகளாகிய நீங்கள் உங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ அதனை எடுத்து படித்து அறிவினை வளர்த்து நாட்டிற்கு ஒரு வழிகாட்டியாக முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com