search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் மோட்டார் மூலம் கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை - பொதுப்பணித்துறை  அதிகாரிகள் எச்சரிக்கை
    X

    கோப்புபடம்.

    மின் மோட்டார் மூலம் கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை - பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

    • பொதுப்பணித்துறை மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்து இந்த ஆண்டு கூடுதல் மகசூல் பெற்று பயன்பெற முன்வர வேண்டும்.

    காங்கயம்:

    ஈரோடு மாவட்ட நீர்வள ஆதார, கீழ்பவானி பாசன கோட்டம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காங்கயம் கோட்டம் பொதுப்பணித்துறை கீழ்பவானி பாசன கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ள நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு உரிய தண்ணீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுபவர்கள் மற்றும் கால்வாயில் இருந்து டிராக்டர்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து கொண்டு சென்று வேறு பாசனத்திற்கு பயன்படுத்தினாலும் மற்றும் உரிய சம்பா நெல் பயிர் பாசனத்திற்காக திறந்து விடப்படும்தண்ணீரை வேறு விற்பனை உட்பட மற்ற ஏதாவது பயன்பாட்டிற்கு பயன்படுத்தினாலும் சம்பந்தப்பட்டவர்கள் தகவல்கள் குறித்து பொதுப்பணித்துறை மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே விவசாயிகள் கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ள தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்து இந்த ஆண்டு கூடுதல் மகசூல் பெற்று பயன்பெற முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×