சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்

அனைத்து பணிமனைகளில் இருந்து எல்லா வழித் தடங்களிலும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.பேருந்துகளின் இயக்கம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது- மேலாண் இயக்குனர்
சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்
Published on

தமிழக அரசுடன் போக்குவரத்து சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதேவேளையில் அனைத்து பேருந்துகளையும் இயக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. மக்கள் எந்தவித அச்சமின்றி பயணம் செய்யலாம். அனைத்து பணிமனைகளில் இருந்து எல்லா வழித் தடங்களிலும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.

அனைத்து டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலைக்கு வந்துள்ளனர். பேருந்துகளின் இயக்கம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பின் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் காலை ஐந்து மணி நிலவரப்படி 3850 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com