என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி அருகே 2 கோவில்களில் துணிகர கொள்ளை
- கோவிலில் 3 கலசங்கள், ஒரு செம்பு குடம் தாம்பாள தட்டு உள்ளிட்ட பொருள்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
- ஆலயத்தில் உள்ள பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஒயர்களை துண்டித்து விட்டு சென்றுள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்துர் கிராமத்தில் ஏரிக்கரையில் தச்சூர் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 கலசங்கள், ஒரு செம்பு குடம் தாம்பாள தட்டு உள்ளிட்ட பொருள்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் இதேபோல் எழுத்தூர் கிராமஊர் அருகே உள்ள அய்யனார் கோயிலில் ஆலயத்தின் முன்பு உள்ள 2 சூலங்கள் பிடுங்கி உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து சுமார் 10,000 பணத்தை திருடி சென்றுள்ளனர்.
அந்த சூலங்களை கோயில் வளாகத்தில் வீசி சென்றுள்ளனர். முன்னதாக ஆலயத்தில் உள்ள பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஒயர்களை துண்டித்து விட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து எழுத்தூர் பகுதியில் உள்ள கோயல்களை திருடர்கள் குறி வைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்