search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே  கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
    X

    வைப்பாரில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம் அருகே கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

    • விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாரில் வீரபாண்டிய கட்ட பொம்மனின் 264-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
    • விருதுநகர், தேனி, நெல்லை, தென்காசி, சிவகங்கை, மதுரை உள் ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தன.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாரில் வீரபாண்டிய கட்ட பொம்மனின் 264-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    விருதுநகர், தேனி, நெல்லை, தென்காசி, சிவகங்கை, மதுரை உள் ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தன.

    வைப்பார்-தூத்துக்குடி சாலையில் பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என்று மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வீர விளையாட்டு கழகச் செயலாளர் விஜயகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னம்மாரி முத்து, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெரிய மாட்டு வண்டியில் 10 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 10 கிலோமீட்டர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டியில் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மாட்டுவண்டி முதல் பரிசையும், 2-வது பரிசை அவானியாபுரம் மோகன்சாமி குமார், 3-வது பரிசை சண்முகாபுரம் விஜயகுமார் மாட்டு வண்டி தட்டி சென்றது.

    2-வது போட்டியாக சின்ன மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. ஆறு கிலோமீட்டர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டியில் ஜக்கம்மாள்புரம் பரமசிவம் என்பவரது மாட்டுவண்டி முதல் பரிசையும், சீவலப் பேரி பகுதியைச் சேர்ந்த துர்காம்பிகை என்பவரது மாட்டுவண்டி 2-வது பரிசையும், சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மெடிக்கல் 3-வது பரிசையும் தட்டிச் சென்றது.

    3-வது போட்டியாக பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இதில் 31,ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    இப்போட்டியை காண விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை நெடுகிலும் கைதட்டி மாட்டு வண்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர். அப்போது திடீரென கூட்டத்திற்குள் உள்ள புகுந்த மாட்டு வண்டி அங்கிருந்த பார்வையாளர்கள் மீது மோதி 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    Next Story
    ×