search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 வீடுகளின் கதவை உடைத்துநகை, பணம் கொள்ளை
    X

    2 வீடுகளின் கதவை உடைத்துநகை, பணம் கொள்ளை

    • காற்றாலை மின் உற்பத்தி நிலைய இயக்குனராக உள்ளார்.
    • வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். காற்றாலை மின் உற்பத்தி நிலைய இயக்குனராக உள்ளார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவை ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது ரவிச்சந்திரன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.9 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய ரவிச்சந்திரன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (74). கணக்காளர். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இவரது மனைவி மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று இருந்தார்.

    அப்போது இவர்களது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து

    உள்ளே நுைழந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 4½ பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து பாலகிருஷ்ணன் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×