search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரக்கு வேன் மோதி சிறுவன் சாவு
    X

    சரக்கு வேன் மோதி சிறுவன் சாவு

    • வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த பவன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே சவரபாதம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது38). விவசாயி. இவரது மகன் பவன் (13). இவர் தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த பரமேஸ் (28) என்பவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் தளி வரை சென்றார். அப்போது அவர்கள் பாலதோட்டப்பள்ளி-தேன்கனிக்கோட்டை சாலை அருகே வந்தபோது அந்தவழியாக வந்த சரக்கு வேன் ஒன்று பரமேஸ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த பவன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்த பரமேஸை சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தளி போலீசார் உடனே அங்கு வந்து விபத்தில் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×