search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே கலையரங்கம் கட்டும் பணிக்கு பூமி பூஜை
    X

    விளாத்திகுளம் அருகே கலையரங்கம் கட்டும் பணிக்கு பூமி பூஜை

    • ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், குதிரைகுளம் ஊராட்சி, ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதேப்போல் சில்லாங்குளம் ஊராட்சி, பரமன் பச்சேரி கிராமத்தில் ரூ.7லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணியையும், தெற்குகல்மேடு கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணி, ஆகியவற்றுக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,

    குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, ஊராட்சி மன்ற தலைவர்கள் விநாயகம், முத்துமணி, எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, கல்மேடுராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சத்யராஜன், தளவைராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், கிளைச் செயலாளர் சக்கையா, சண்முகபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கச்சாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×