search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே ரெயில்வே பாதையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்,
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே ரெயில்வே பாதையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்,

    • ரெயில்வே பாதையின் நடுவில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இறந்து கிடந்தார்.
    • ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆணைவாரி பகுதியில் ரெயில்வே பாதை உள்ளது. இப்பகுதி மக்கள் இன்று காலை அங்கு சென்ற போது ரெயில்வே பாதையின் நடுவில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இறந்து கிடந்தார். இதையடுத்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

    திருவெண்ணைநல்லூர் போலீசார் விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலையில் சென்ற ராமேஸ்வரம் அஜ்மீர் ரெயில் இவர் மீது மோதியிருக்கலாம் என்று ரெயில்வே போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்தாரா? இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? ரெயிலில் தற்கொலை செய்து ெகாண்டாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×