என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலம் கட்ட பூமிபூஜை
- இவ்வழியே கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்து வந்தனர்.
- பொதுமக்கள் மாற்று வழியில் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது.
பேராவூரணி:
பேராவூரணி அருகே முடச்சிக்காடு ஊராட்சி அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் சமத்துவபுரம் செல்லும் வழியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பூனை குத்தி காட்டாறு தரைப் பாலமாக உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் பெருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.
இவ்வழியே கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்து வந்தனர். பொதுமக்கள் மாற்று வழியில் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. மேம்பாலம் கட்டி தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த பூனைக்குத்தி காட்டாற்று பாலத்தில் 200 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட பாலம் கட்ட பொதுப்பணித்துறை மூலம் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதற்கான பூமி பூஜையினை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ஒன்றிய குழு துணை தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து, முடச்சிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, பேராவூரணி தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன்,
சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், அப்துல் மஜீது, பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்