தென்காசி குறுவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் பாரத் மாண்டிசோரி முதலிடம்

மாணவர்கள் மிக மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும், மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்றனர். கூடைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களைப் பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் இராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவியரணியுடன் பாரத் கல்விக் குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நாராயணன்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவியரணியுடன் பாரத் கல்விக் குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நாராயணன்.
Published on

தென்காசி:

தென்காசி குறுவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டி செய்யது ரெசிடென்சியல் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

இப்போட்டியில் கலந்து கொண்ட இலஞ்சி பாரத் மாண்டிசோரி மாணவியர் பிரிவில் மிக மூத்தோர் முதலிடமும், மூத்தோர் 2-ம் இடமும் பெற்றனர்.

அதேபோல மாணவர்கள் மிக மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும், மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்றனர்.

மிக மூத்தோர் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவியர் தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கூடைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களைப் பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் இராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com