என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெங்களூரு வாலிபர் நீரில் மூழ்கி சாவு
Byமாலை மலர்4 April 2023 9:55 AM GMT
- மதுகுமார் தனது நண்பர்களுடன் கிட்டுகாடு பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்.
- ஆழமான பகுதிக்கு சென்றதால் அவரால் கரைக்கு வரமுடியாமல் நீரில் மூழ்கி பலியானார்.
தருமபுரி,
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பட்டாத்தூர் நாகப்பா கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் மதுகுமார் (வயது 23).
இவர் தனது நண்பர்களுடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாவுக்காக வந்தார். நேற்று மதுகுமார் தனது நண்பர்களுடன் கிட்டுகாடு பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது மதுகுமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவரால் கரைக்கு வரமுடியாமல் நீரில் மூழ்கி பலியானார். அவரது உடல் ஊட்டமலை பரிசல் துறை பகுதியில் கரை ஒதுக்கியது.
இதுகுறித்து அவரது நண்பர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மதுகுமாரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X