search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.இ. 3-ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
    X

    பி.இ. 3-ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

    • ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்பு வதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இதில் சேலம், நாமக்கல் மாவட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்பு.

    சேலம்:

    அண்ணா பல்கலைக்க ழகத்தின் கீழ் இயங்கும் 431 என்ஜினீயரிங் கல்லூரி களில் இளநிலைப் படிப்பு களுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்பு வதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதற்கட்ட கலந்தாய்வில் 10,340 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து 2-ம் கட்ட கலந்தாய்வு கடந்த செம்படம்பர் மாதம் 25-ந்தேதி தொடங்கி, புதன்கிழமை முடிவடைந்தது. இதில் பங்கேற்க 31,095 மாண வர்களுக்கு அைழப்பு விடுக்கப்பட்டது. அதில் 24,430 பேர் கலந்தாய்வில் கலந்துகொண்டு விருப்ப மான இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில் 18,521 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு பிரிவில் 1,426 ேபருக்கு விருப்ப இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரு கட்டங்களும் சேர்த்து 30,317 இடங்கள் நிரம்பியுள்ளன.

    சேலம், நாமக்கல்...

    தொடர்ந்து 3-ம் கட்ட கலந்தாய்வு நேற்று (வியா ழக்கிழமை) தொடங்கியது. இதில் பங்கேற்க ெமாத்தம் 49,042 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கலந்தாய்வில் ் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். அவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். கல்லூரிகளை தேர்வு செய்யாத மாணவ- மாணவிகள் நாளைக்குள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளின் விருப்பப்பட்டியலை இறுதி செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×