search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுந்தராபுரம் அருகே ஏடி,எம் எந்திரத்தில் பேட்டரி திருட்டு
    X

    சுந்தராபுரம் அருகே ஏடி,எம் எந்திரத்தில் பேட்டரி திருட்டு

    • 11 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ஏடி.எம் மிஷின் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார்
    • ஏடி.எம் அறை உடைக்கப்பட்டு, அதில் உள்ள நான்கு பேட்டரி திருட்டு போய் இருந்தது.

    குனியமுத்தூர்,

    கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் வசிப்பவர் ராஜ்குமார் (வயது36). இவர் கடந்த 11 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ஏடி.எம் மிஷின் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார் .சம்பவத்தன்று சுந்தராபுரம் வணிக வளாகத்திற்கு எதிரே உள்ள தனியார் வங்கி ஏடி.எம்.மில் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். மறுநாள் காலையில் இவரது உதவியாளர் வந்து பார்த்தபோது ஏடி.எம் அறை உடைக்கப்பட்டு, அதில் உள்ள நான்கு பேட்டரி திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து ராஜ்குமாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த ராஜ்குமார் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பேட்டரி திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×