ஊட்டி கல்லட்டி மலைபாதையில் தடுப்பு வேலிகள் அமைப்பு

நீலகிரி சாலைகளில் பயணிக்க அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.வெளிமாநில, வெளி மாவட்ட வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
ஊட்டி கல்லட்டி மலைபாதையில் தடுப்பு வேலிகள் அமைப்பு
Published on

ஊட்டி 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டுனர்களும், வெளி மாநில வாகன ஓட்டுனர்களும் மிகவும் ஆசையுடன் வாகனங்களை இயக்குவதற்கு முக்கிய காரணமே இயற்கை எழில் சூழ்ந்த காடுகளுக்கு நடுவே உள்ள சாலையில் இதமான சூழ்நிலையில் செல்வததால் தான்.

இதன் காரணமாக நீலகிரி சாலைகளில் பயணிக்க அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான முதுமலைக்கு ஊட்டியில் இருந்து கல்லட்டி சாலை வழியாக செல்லாம். இந்த சாலையானது 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை வளைவு பாதையாகும்.

இந்த சாலையில் பல்வேறு ஆபத்துகளும், தொடர் விபத்துகளும் நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னையில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

தொடர் விபத்துக்களால் அந்த சாலையில் வெளிமாநில, வெளி மாவட்ட வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

கல்லட்டி மலைப்பா தையில் உள்ள மிகப்பெரிய இறங்கு முகமான பாதையில் வாகனத்தை இயக்குபவர்கள் இருபுறமும் இயக்கும் வகையில் அந்த சாலை இருந்தது.

அந்த பகுதியில் சிலர் வேகமாக வாகனங்களை இயக்குவதால் பாதுகாப்பு கருதி அந்த சாலையின் இடையே கீழ் இறங்கும் வாகனங்கள் ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்லக்கூடிய வேகக்கட்டுப்பாட்டு கோடுகளை தாண்டி மெதுவாக செல்லும் வகையிலும், மேல் நோக்கி வரும் வாகனங்கள் எந்தவித தடையும் இன்றி மேலேறி வரும் விதமாக சாலைகளின் நடுவே தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இனிவரும் காலங்களில் வேகமான பயணம் இந்த சாலைகளில் இல்லாமல் மிதமான வேகம் உயிர் பாதுகாப்பு என்பதை வலியுறுத்தும். இது போன்ற செயல்பாடுகள் அனைத்து தரப்பினரினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com