search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி உதவி மேலாளர் பலி
    X

    சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி உதவி மேலாளர் பலி

    • வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • நடுவக்குறிச்சி சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வேலப்பநாடாரூர் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது மகன் ஜீவானந்தம்(வயது 24).

    நாய் குறுக்கே பாய்ந்தது

    இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். தினமும் வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    நடுவக்குறிச்சி சாலையில் சென்றபோது எதிர்பாரா தவிதமாக சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது. இதனால் ஜீவானந்தம் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நாய் மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ஜீவானந்தம் படுகாயம் அடைந்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த அவரை நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவரது உறவின ர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    Next Story
    ×