search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலசமுத்திரம் பேரூராட்சி கூட்டம்
    X

    பேரூராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

    பாலசமுத்திரம் பேரூராட்சி கூட்டம்

    • கூட்டத்தில் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள வருவாய்த்துறையினர் பட்டா வழங்க கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • கூட்டத்தில் செயல் அலுவலர் , பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பழனி:

    பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் ராஜராஜஸே்வரி சுப்புராம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் விஜய்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அனைத்து வார்டு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தி சந்தை அமைப்பது, நத்தம் புறம்போக்கு நிலங்களை பேரூராட்சி மன்ற ஆட்சேபனையின்மை தீர்மானமின்றி தனிநபருக்கோ, அமைப்புகளுக்கோ வருவாய்த்துறையினர் பட்டா வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயல் அலுவலர் சித்திரைக்கனி, பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×