search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
    X

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    அய்யலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

    • அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட கோம்பை, பஞ்சந்தாங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
    • தொழிலாளிகள் தார் சாலை அமைக்கும் பணியில் இடம் பெற வேண்டுமென பேரூராட்சி கவுன்சிலர் கோரிக்கை வைத்தார்.

    வடமதுரை:

    அய்யலூர் முதல் நிலை பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் கருப்பன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் செந்தில், வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட கோம்பை, பஞ்சந்தாங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 5வது வார்டு அய்யனார் கோவில் பிரிவு முதல் பஞ்சந்தாங்கி வரை சாலை விரிவாக்கம் செய்ய வனத்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. 7வது வார்டில் கலர்பட்டியில் இருந்து புத்தூர் சாலை வரை மண் பாதையை மேம்படுத்தி தார் சாலை, கழிவுநீர், சாக்கடை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அப்பகுதியில் உள்ள தொழிலாளிகள் தார் சாலை அமைக்கும் பணியில் இடம் பெற வேண்டுமென பேரூராட்சி கவுன்சிலர் பிரியங்கா தினேஷ் கோரிக்கை வைத்தார். இளநிலை உதவியாளர் அல்லிமுத்து நன்றி கூறினார்.

    Next Story
    ×