search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரவேணுவில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
    X

    அரவேணுவில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

    • ஜக்கனாரை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
    • வேளாண்மை அறிவியல் நிலையம், மண் பரிசோதனை நிலையம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி வட்டார தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட அரவேணுவில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கு கோத்தகிரி வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    இதில் ஜக்கனாரை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். விழாவில், நீலகிரி மழைசாரல் கலை குழுவின் வாயிலாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, வேளாண்மை அறிவியல் நிலையம், மண் பரிசோதனை நிலையம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×