ஓசூரில் ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

கூட்டமைப்பின் இணை இயக்குநர் (பொது) உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில், கூட்டமைப்பின் இணை இயக்குனர் உன்னிகிருஷ்ணன் பேசியபோது எடுத்த படம்.
கருத்தரங்கில், கூட்டமைப்பின் இணை இயக்குனர் உன்னிகிருஷ்ணன் பேசியபோது எடுத்த படம்.
Published on

ஓசூர்,

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்ட மைப்பின் சார்பில், ஓசூரை ஏற்றுமதி மையமாக மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டுத் திட்ட கருத்தரங்கம், ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

ஏற்றுமதியில் பெருகி வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக ஏற்றுமதியா ளர்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும், மாவட்டத்தை ஏற்றுமதி மையமாக மேம்படுத்தவும், சர்வதேச சந்தையில் கிடைக்கும் பல்வேறு வர்த்தக வாய்ப்புகள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது மற்றும் கீழ் கிடைக்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் பலன்கள், ஏற்றுமதிகளை நிர்வகிக்கும் நடைமுறைகள் போன்றவற்றைப் பற்றி தொழில்முனைவோர் புரிந்து கொள்ளவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த கருத்தரங்கிற்கு, இந்திய ஏற்றுமதி நிறுவ னங்களின் கூட்டமைப்பின் இணை இயக்குநர் (பொது) உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் ராமமூர்த்தி, கலால் துறையின் ஜி.எஸ்டி.பிரிவு அதிகாரி பூபதி, எச்.டி.எப்.சி. வங்கி அதிகாரி அனுராக்,பாக்கியவேலு, ஓசூர் ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன், கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பேசினார்கள்.

இந்த கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com