search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி ஜே.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியில்  விழிப்புணர்வு கருத்தரங்கு
    X

    ஊட்டி ஜே.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

    • சுகாதார விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடக்கிறது.
    • தேசிய அளவில் பார்மசி கல்லூரியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ஊட்டி,

    ஊட்டி ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் கர்ப்பப்பை நீர்க்கட்டி பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் மற்றும் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் மூலிகை மருந்துகள் மற்றும் மருந்தியல் துறை சார்பில் நடைபெற்றது.கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பி. தனபால் தலைமை தாங்கினார். டாக்டர் சண்முகம், டாக்டர் ஷங்கர், டாக்டர் பிரியங்கா துவாரம்புடி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளராக இருந்தனர். கல்லூரி இணை பேராசிரியர் அருண் அனைவரையும் வரவேற்றார். இதில் தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் துறை தலைவர் சண்முகம், லக்னோ மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி டாக்டர். ராஜேஷ் குமார் ஜா, முதன்மை விஞ்ஞானி மற்றும் வணிக மேம்பாட்டு அதிகாரி டாக்டர் நசீம் ஏ.சித்திகி, சமூக சேவகர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் தேசிய அளவில் பார்மசி கல்லூரியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் 40க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், போஸ்டர் மற்றும் ஆயுவுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டது. விழாவின் நிறைவில் சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×