search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு பேரணி

    • ரோட்டரி சங்கங்கள் மற்றும் சைக்கிள் அசோசியேசன் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    பட்டுக்கோட்டை:

    சர்வதேச செஸ் ஒலிம்பி யாட் போட்டிகள் வருகிற ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் அதனை கொண்டாடும் வகையில் பொதுமக்களிடம்செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ரோட்டரி சங்கங்கள் மற்றும் சைக்கிள் அசோசியேசன் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணி பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து தொடங்கி பெரிய கடை தெரு வழியாக மணிகூண்டு சென்றடைந்தது. பேரணியில் சிறுவர்கள் சிறுமிகள் சிலம்பங்களை சுற்றிக்கொன்றே சென்றனர். இதில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×