search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம்
    X

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம்

    • நீரின் இன்றியமையாமையினை விளக்கும் விழிப்புணா்வு நாடகம், சுதந்திர தின நடனமும் நடைபெற்றது.
    • சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் நாளை வரை 3 தினங்கள் மக்கள் தங்கள் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டது. இதனை ஏற்றும் நேற்று நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர்.

    மேலும் 75-வது சுதந்திர தின விழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக குன்னூரில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சிம்ஸ் பூங்கா படகு இல்லத்தில் குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி மாணவிகள், தேசிய மாணவா்படை சாா்பில் உன்னத் பாரத் அபியான் என்ற நீரின் இன்றியமையாமையினை விளக்கும் விழிப்புணா்வு நாடகம், சுதந்திர தின நடனமும் நடைபெற்றது. மாணவிகள் நடனமாடிய படி தேசிய கொடியை ‌ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    சுற்றுசூழல் பாதுகாப்பு, தேசப்பற்று குறித்து மாணவிகளின் எடுத்துரைத்தனர். இது அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை அதிகாரி லெப்டெனென்ட் சிந்தியா ஜாா்ஜ் செய்திருந்தாா்.

    Next Story
    ×