என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு
- இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிய வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்கக் கூடாது.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் போக்கு–வரத்து காவல்துறையின் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பென்னாகரம் அரசு மருத்துவமனை எதிரே அம்பேத்கர் சிலை பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் தலைமை வகித்து, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிய வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்கக் கூடாது. இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது, சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கக் கூடாது.
கனரக வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது, உரிமம் இல்லாத வாகனத்தை இயக்கக் கூடாது என பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள கட்டண விவரம் குறித்து வாகன ஓட்டிகள் இடையே எடுத்துரைத்தார்.
இதில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மாதப்பன், முருகன், காவலர் மூர்த்தி மற்றும் வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்