search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழப்பாவூர் பேரூராட்சியில் துப்புரவு பணிகள் குறித்த விழிப்புணர்வு
    X

    விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்

    கீழப்பாவூர் பேரூராட்சியில் துப்புரவு பணிகள் குறித்த விழிப்புணர்வு

    • கீழப்பாவூர் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் ராஜன் தலைமையில் மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி றடைபெற்றது.
    • பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது பற்றியும் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    தென்காசி:

    கீழப்பாவூர் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் ராஜன் தலைமையில் மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி கீழப்பாவூர் அக்ரஹாரம் 4-ம் தெரு மற்றும் சுரண்டை மெயின் ரோடு பகுதியில் விளம்பர சுவரொட்டி அகற்றுதல், துப்புரவு பணிகள் நடைபெற்றன. மேலும் பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது பற்றியும்,, திறந்த வெளியில் மலம் கழித்தல் செயலை தடுத்தல் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கனகபொன்சேகா முருகன், விஜிராஜன், இசக்கிமுத்து, பவானி இலக்குமண தங்கம், வீரன்,ராமகிருஷ்ணன், விநாயகபெருமாள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×