மூலைக்கரைப்பட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல்

மிக்கேல் போஸ்கோ அங்குள்ள மிக்கேல் அதிதூதர் கெபியில் மண்ணை அள்ளி போட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த ஜெபஷ்டின், மிக்கேல் போஸ்கோவை கம்பால் தாக்கினார்.
மூலைக்கரைப்பட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல்
Published on

களக்காடு:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள உள்வாய் நாகல்குளத்தை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் மிக்கேல் போஸ்கோ (வயது 29). தொழிலாளி. இவர் சம்பவ த்தன்று அங்குள்ள மிக்கேல் அதிதூதர் கெபியில் மண்ணை அள்ளி போட்டுள்ளார். இதைப்பார்த்த அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சேசுமிக்கேல் மகன் ஜெபஷ்டின் (25), மிக்கேல் போஸ்கோவை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெபஷ்டின், மிக்கேல் போஸ்கோவை கம்பால் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார்.

இதுபற்றி மூலை க்கரைப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுதொடர்பாக ஜெபஷ்டினை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com