கோவையில் கள்ளக்காதலியுடன் குடித்தனம்-தொழிலாளி மீது தாக்குதல்

ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எனது மனைவி ஒரு வாலிபருடன் ஓடி விட்டார்.
கோவையில் கள்ளக்காதலியுடன் குடித்தனம்-தொழிலாளி மீது தாக்குதல்
Published on

கோவை:

கோவை காளப்பட்டி அருகே உள்ள வீரியம்பா ளையத்தை ேசர்ந்தவர் முருகன் (வயது 31). கூலித் ெதாழிலாளி.

இவர் பீளமேடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது சொந்த ஊர் தர்மபுரி. நான் கோவையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறேன். இந்தநிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எனது மனைவி ஒரு வாலிபருடன் ஓடி விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த எனக்கு செந்தில்முருகன் என்பவரது மனைவி கவிதா என்பவருக்கு எனக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று ஜாலியாக இருந்து வந்தேன். இந்த விவகாரம் கவிதாவின் கணவருக்கு தெரிய வரவே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நான் கவிதாவை அழைத்துக்கொண்டு தர்மபுரிக்கு சென்றேன். இது குறித்து அவரது கணவர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் எங்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது கவிதா அவரது கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இதனையடுத்து அவருடன் கோவைக்கு வந்த நான் வீரியம் பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தேன்.

சம்பவத்தன்று நான் சித்ரா சந்திப்பு வழியாக நடந்து சென்றேன். அப்போது அங்கு வந்த செந்தில்குமாரின் நண்பர்கள் நேரு நகரை சேர்ந்த ஆனந்தன் (31), ஆட்டோ டிரைவர் கணேசன் (34), சிவா ஆகியோர் அவரது மனைவியை அவருடனே அனுப்பி வைக்கும்படி கூறினர். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கையில் வைத்து இருந்த பீர் பாட்டில் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய என்னை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் போரில் பீளேமேடு போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகனை தாக்கிய ஆனந்தன், கணேசன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலை மறைவாக உள்ள சிவாவை தேடி வருகிறார்கள்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com