search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் அருகே மதுகுடிக்க பணம் கேட்டு கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்- 3 பேர் மீது வழக்கு
    X

    சாத்தான்குளம் அருகே மதுகுடிக்க பணம் கேட்டு கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்- 3 பேர் மீது வழக்கு

    • ஆகாஷ் உள்ளிட்ட 3 பேரும், செந்தில்வேலிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர்.
    • செந்தில்வேலை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது22), கட்டிட தொழிலாளி.

    தொழிலாளி தாக்குதல்

    இவர் கடந்த 25-ந்தேதி சாத்தான்குளம் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றார். சாத்தான்குளம் அருகே ஆத்துபாலம் அருகில் சென்றபோது சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்துரு மற்றும் லிங்கம் மகன் அழகு, சடையன்கிணறு இசக்கிமுத்து மகன் ஆகாஷ்(22) ஆகிய 3 பேரும் செந்தில்வேலை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள், செந்தில்வேலிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பீர் பாட்டில் மற்றும் கைகளால் தாக்கியதுடன், அருகில் உள்ள கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். இவர்களில் ஆகாஷை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×