search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோதனைச்சாவடிகளில்  உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    X

    சோதனைச்சாவடிகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

    • அரிசி ஆலை, மாவு மில்களில் சோதனையிட்டனர்.
    • மில் உரிமையாளர் ராஜாவை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கோவை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தமிழக - கர்நாடக மாநில எல்லையில் அத்திப்பள்ளி சாலையில் அமைந்துள்ள டி.வி.எஸ்., சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காய்கறி வண்டிகளிலும் ரேஷன் அரிசி கடத்துவதாக வந்த புகாரையடுத்து அந்த வாகனங்களையும் சோதனையிட்டார்.

    சேலம் உட்கோட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் விவகானந்தன், சப்&இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, முரளி ஆகியோர் நேற்று காவேரிப்பட்டணம் பகுதிகளில் அரிசி ஆலை, மாவு மில்களில் சோதனையிட்டனர். இதில் சவூளூர் கூட்டு ரோடு அருகில் உள்ள ராஜா என்கிற நிப்பட்ராஜா (வயது 50) என்பவருக்கு சொந்தமான மாவுமில்லில் பதுக்கப்பட்டிருந்த, 38 ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும், 10 கோதுமை மூட்டைகள் மற்றும், 59 மூட்டையில் இருந்த அரிசி மாவு உள்ளிட்டவைகளை கைப்பற்றி, மில் உரிமையாளர் ராஜாவை கைது செய்தனர். அதேபோல குண்டலப்பட்டியை சேர்ந்த சங்கர் (48) என்பவரது மாவுமில்லில் இருந்த, 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×