சாலைப்புதூர் விற்பனை கூடத்தில்நிலக்கடலை காய் ரூ. 3.68 லட்சத்திற்கு ஏலம்

சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
சாலைப்புதூர் விற்பனை கூடத்தில்நிலக்கடலை காய் ரூ. 3.68 லட்சத்திற்கு ஏலம்
Published on

பரமத்தி வேலூர்:

சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 53.79 1/2 குவிண்டால் எடை கொண்ட 176 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.75.70-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.65.19-க்கும், சராசரி விலையாக ரூ.74.10-க்கும் என ரூ. 3 லட்சத்து 68ஆயிரத்து 440-க்கு விற்பனையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com