search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் திருநள்ளாறில்  வயலில் மின்மோட்டார் திருடிய கொள்ளையர்கள் கைது
    X

    கைதான கொள்ளையர்களை படத்தில் காணலாம்.

    காரைக்கால் திருநள்ளாறில் வயலில் மின்மோட்டார் திருடிய கொள்ளையர்கள் கைது

    • திருநள்ளாறு ரிங்க் ரோட்டில், சந்தேகத்துக்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர்.
    • சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள மின் மோட்டாரையும், திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர்.

    புதுச்சேரி :

    காரைக்கால் அருகே திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் தலைமையில் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருநள்ளாறு ரிங்க் ரோட்டில், சந்தேகத்துக்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். விசாணையில் அவர்கள் கையில் வயலுக்கு நீர் பாய்ச்ச கூடிய, நீர் மூழ்கி மின் மோட்டார் குறித்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையின் முடிவில், திருநள்ளாறு அருகே பாய்ச்ச வைத்திருந்த நீர்மூழ்கி மோட்டரை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட திருநள்ளாறு சுப்ராயபுரம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நேதாஜி(வயது29) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரன்(28) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள மின் மோட்டாரையும், திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர்.

    Next Story
    ×