search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன் விற்பனை நிலையங்களில், உணவு பாதுகாப்பு சான்றிதழ் எடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும்
    X

    பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    மீன் விற்பனை நிலையங்களில், உணவு பாதுகாப்பு சான்றிதழ் எடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும்

    • இரு கடைகளில் இருந்து மட்டும் தரம் குறைவான மீன்கள் சுமார் 20 கிலோ அளவிலானது பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
    • உணவு பாதுகாப்பு உரிமம் ஒரு சில கடைகள் மட்டும் பெற்றுள்ளனர். எடுக்காதவர்கள், புதுப்பிக்காதவர்கள் 7 தினங்களுக்குள் விண்ண ப்பிக்க வலியுறுத்தப்பட்டது

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்டம் முழுதும் உள்ள மீன் விற்பனை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க பரிந்துரைத்துள்ளார். அதன் அடிப்படையில்

    தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா மற்றும் மீன் வளத்துறை உதவி இயக்குனர் கோகுல ரமணன் வழிகாட்டலின் படி, பாலக்கோடு மீன் மார்க்கெட் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் மீன்வளத்துறை சார் ஆய்வாளர் வெங்க டேசன், மீன்வள பாதுகாவலர் முருகன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    10-க்கும் மேற்பட்ட கடைகளில் மீன்கள் பார்வையிட்டு இருப்பு மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த திலேபியா,ரோக், ரூப்சந்த், மிருதுளா மீன்கள் என அனைத்து வகையான மீன்களையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் மீன்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க, மீன்களில் பார்மலின் உபயோகப் படுத்தப்பட்டு இருக்கிறதா என பார்மலின் டெஸ்ட் கிட் உபகரணம் கொண்டு வெளி மாநில (ஆந்திரா) மீன் மற்றும் உள்ளூர் மீன்களை ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் பார்மலின் ஏதும் கலந்து விற்பனை செய்யப்படவில்லை என அறியப்பட்டது.

    இரு கடைகளில் இருந்து மட்டும் தரம் குறைவான மீன்கள் சுமார் 20 கிலோ அளவிலானது பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

    மேற்படி கடைக்காரர்களுக்கு தலா ரூ.1000 விதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் ஒரு சில கடைகள் மட்டும் பெற்றுள்ளனர். எடுக்காதவர்கள், புதுப்பிக்காதவர்கள் 7 தினங்களுக்குள் விண்ண ப்பிக்க வலியுறுத்தப்பட்டது.

    உணவு பாதுகாப்பு சான்றிதழ் எடுக்காவிடில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி உடனடி அபராதம் ஐந்தாயிரம் விதிக்க மாவட்ட நியமன அலுவலர் உத்தர விட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.

    மேலும் இந்த ஆய்வுகள் மாவட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் அலுவலர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

    Next Story
    ×