search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மாபேட்டையில், நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அம்மாபேட்டையில், நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • அங்காடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • கீழ்புத்தூரில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதையும் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் ஆலங்குடி கொத்தாட்டையில் புதிய நெற்களம் கட்டும் பணி குறித்தும், கொத்தடடை கிராமத்தில் ஊராட்சி புதிய அங்கன்வாடி கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஆலங்குடி ஊராட்சி அருள் மொழி பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புரைமைக்கப்பட்ட கழிவறை கட்டிட பணி குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், ஆலங்குடி ஊராட்சி கொத்தட்டையில் உள்ள அங்கனவாடியில் பயிலும் குழந்தைகளின் வளர்ச்சி குறித்தும், கன்னித்தோப்பு பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை குறித்தும் ஆய்வு நடத்தினோம்.

    ஆலங்குடி ஊராட்சியில் உள்ள பொது விநியோகத் திட்ட அங்காடியில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர் ஒன்றியம் மாரியம்மன் கோவில் சமுத்திரம் ஏரியில் நீர்வளத்துறை கல்லணை கால்வாய் கோட்டம் சார்பில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில் தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புத்தூரில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அம்மாபேட்டை தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

    இந்த ஆய்வின்போது பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, அம்மாபேட்டை செயல் அலுவலர் ராஜா, வட்டார வார்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன், கூத்தரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×