search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டையில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
    X

    கோப்பு படம்.

    நிலக்கோட்டையில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

    • நிலக்கோட்டையில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
    • இதில் காயமடைந்த பன்னீர்செல்வம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள கருத்தாண்டிபட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் அங்குள்ள விநாயகர் கோவில் அருகே அமர்ந்திருந்தார்.

    அப்போது கமலேஷ் (16), ஹரிஸ் (17), விஜயன், திலகம் ஆகிய 4 பேரும் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பன்னீர்செல்வம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

    இது குறித்து விளாம்பட்டி போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×