search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே சொத்து தகராறில் பெண் மீது தாக்குதல்
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே சொத்து தகராறில் பெண் மீது தாக்குதல்

    • சொத்து பிரிக்கும்போது இருகுடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
    • பெண்ணை தாக்கி அவரது செல்போனை உடைத்தனர்.

    தேனி:

    தேனி அருகே சுருளிதோட்டத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவருக்கு முதல் மனைவி மூலம் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களை திருமுருகனின் அண்ணன் வளர்த்த வருகிறார். இந்த நிலையில் பரமேஸ்வரி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சொத்து பிரிக்கும்போது இருகுடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த திருமுருகனின் அண்ணன் திருமேனி, அவரது மனைவி வானதி, சுரேந்தர், சுபாஷினி ஆகியோர் பரமேஸ்வரியை தாக்கி அவரது செல்போனை உடைத்தனர். இதனைதொடர்ந்து அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரமேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்தபுகாரி ன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×