என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வரட்டாறு அணை நிரம்பியுள்ளதால் ஏரிகளில் உபரி நீரை சேமிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பியுள்ளது.
- ஏரிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. அணையின் நீர்ப்பிடிப்பு உயரம் 34.45 அடியாகும்.அணையின் நீளம் 1,360 மீட்டராகும்.
சித்தேரி மலை தொடரில் பெய்த கனமழையின் காரணமாக வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பியுள்ளது.
இதனால் தாதராவலசை, கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூர், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, மாம்பாடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 30-க்கும் அதிகமான ஏரிகள், குளம்,குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்புவதற்கு ஆதாரமாக இருப்பதுடன் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலது, இடதுபுற வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் திறந்துவிட்டால் 15-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீரை சேமிக்க முடியும்.
தற்போது எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை, வேப்பம்பட்டி, மாம்பாடி, அச்சல்வாடி உள்ளிட்ட கிராம பகுதியிலுள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் உள்ளன.
பொதுப் பணிதுறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வள்ளிமதுரை சுற்று வட்டாரப் பகுதியில் வறண்டு கிடக்கும் ஏரிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்