search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் கலை திருவிழா
    X

    வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் கலை திருவிழா

    • தம்பிதுரை எம்.பி., பங்கேற்று, கலையரங் கத்தை திறந்து வைத்தார்.
    • நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வேளாங் கண்ணி பப்ளிக் பள்ளியில் (சி.பி.எஸ்.இ.) கலையரங்கம் திறப்பு விழா மற்றும் கலை விழா நடந்தது. இந்த விழாவிற்கு ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியின் அறங்காவலர் லாசியா தம்பிதுரை தலைமை தாங்கினார். வேளாங்கண்ணி பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார்.

    இந்த விழாவில் பள்ளியின் நிறுவனரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான தம்பிதுரை எம்.பி., பங்கேற்று, கலையரங் கத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் கரூர் சின்னசாமி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி., பெருமாள், முன்னாள் எம்எல்ஏ, முனிவெங்கட்டப்பன், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முனியப்பன், கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ், அதியமான் பொறியியல் கல்லூரி அறங்காவலர் சுரேஷ்பாபு, வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளிகளின் இயக்குநர் விஜயலட்சுமி, அறிஞர் அண்ணா கல்லூரியின் முதல்வர் தனபால் மற்றும் வேளாங்கண்ணி கல்வி குழும பள்ளிகளில் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொறியாளர் சரவணன், வேலாயுதம், தொழிலதிபர் ரகுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில், திருச்சி சரவணகுமார் குழுவினரின் பலகுரல் நிகழ்ச்சி மற்றும் நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இறுதியில் பள்ளியின் முதல்வர் அசோக் நன்றி கூறினார்.

    Next Story
    ×