search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதை நெல்லை பயன்படுத்தினால் நல்ல தரமான நாற்றுகள் கிடைக்கும்
    X

    விதை நெல்லை பயன்படுத்தினால் நல்ல தரமான நாற்றுகள் கிடைக்கும்

    • சான்று பெற்ற விதை நெல்லை பயன்படுத்தினால் நல்ல தரமான நாற்றுகள் கிடைக்கும்
    • இருப்புபதிவேடு, கொள்முதல் ரசீது ஆகியவற்றையும் விற்பனையாளர்கள் வைத்திருக்க வேண்டும்.

    அரியலூர்,

    சான்று பெற்ற விதை நெல்லை பயன்படுத்தினால் நல்ல தரமான வாளிப்பான நாற்றுகள் கிடைக்கும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தெரிவித்தது: அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தற்போது நாற்றுவிடும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல்லை வாங்கும் போது அரசினால் விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

    விவசாயிகள் சான்று பெற்ற விதைநெல்லை பயன்படுத்தினால் நல்ல தரமான வாளிப்பான நாற்றுக்ள கிடைக்கும் . பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படும். பூச்சி நோய் தாக்குதல் குறையும். ஒரே நேரத்தில் அறுவடைக்கு வரும். நல்ல மகசூல் கிடைக்கும். விவசாயிகள் உண்மை நிலை விதைகளை வாங்கும் போது அது நம் பகுதிக்கு, நம் பருவத்திற்கு ஏற்றதா என்று பார்த்து வாங்கவேண்டும். அவசியம் விற்பனையாளரிடம் இருந்து ரசீது கேட்டுப் பெறவேண்டும். ரசீதில் காலாவதிநாள், லாட் நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்றுபார்க்க வேண்டும். விற்பனை ரசீதை அறுவடை முடியும் வரைபத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

    விதைவிற்பனை யாளர்கள் வெளிமாநில நெல் ரகங்களை விற்பனை செய்யும் போது ஊஹழ்ம் ஐஐ பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அறிவிக்கை செய்யபடாத தனியார் உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யம் போது பதிவுசான்றிதழ் , முளைப்புதிறன் சான்று பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

    இருப்புபதிவேடு, கொள்முதல் ரசீது ஆகியவற்றையும் விற்பனையாளர்கள் வைத்திருக்க வேண்டும். இவைகள் ஆய்வின் போது இல்லாவிட்டால் விதைச் சட்டபடி விதை விற்பனையாளர்கள் மீதுநடவடி க்கைஎடுக்கப்படும்.

    Next Story
    ×