search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
    X

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

    • ஜெயங்கொண்டத்தில்பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
    • மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமை தாங்கினார்.

    ஜெயங்கொண்டம்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமை தாங்கினார்.

    அரசு மருத்துவர் கீதா மணிவண்ணன் முன்னிலை வகித்தார். பீனிக்ஸ் பெண்கள் குழந்தைகள் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் கலந்துகொண்டு பெண் குழந்தைகள் உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் போது நண்பர்கள் மற்றும் பெற்றோர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் பெண்கள் கல்வி விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை செய்ய வேண்டும் என பேசினார்.

    நிகழ்ச்சியில் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருட் சகோதரிகள் சகாயராணி, நிர்மலா பிரான்சிஸ், இணை செயலாளர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×