search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவு
    X

    மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவு

    • ஜெயங்கொண்டம் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவு
    • தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான கணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம் அடுத்த கழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(வயது35). இவரது மனைவி பானு ப்பிரியா(29). இவர்களுக்கு 3 வயதில் ஆண் ஒரு குழந்தை உள்ளது. தற்போது இவர்கள் இலையூர் கண்டி யங்கொல்லையிலுள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மனோகரன் பானுப்பிரியா அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

    இதனிடையே மனைவியின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த மனோகரன் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட பானுப்பிரியா, வாரியங்காவில் வசிக்கும் தனது தந்தை நீலமேகம் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து வேலைக்குச் சென்றுள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று உணவகத்தில் வேலை செய்து கொ ண்டிருந்த பானுப்பிரி யாவை, இனி வேலைக்கு செல்லக்கூடாது என மனோ கரன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மனோகரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பானுப்பிரியாவின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    தகவலறிந்து வந்த பானுப்பி ரியாவின் தந்தை நீலமேகம், ரத்த வெள்ளத்தில் கிடந்த பானுப்பிரியாவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து நீலமேகம் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மனோகரனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×