search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுபட்ட பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை
    X

    விடுபட்ட பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை

    • அரியலூர் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் 15 -ந் தேதி தொடங்கப்பட்டு 1,51,038 எண்ணிக்கையிலான மகளிர் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை பெறுகின்றனர்.

    இதில் அரியலூர் வட்டத்தை சேர்ந்த 51,893 மகளிரும், ஜெயங்கொண்டம் வட்டத்தைச் சேர்ந்த 53,726 மகளிரும், செந்துறை வட்டத்தைச் சேர்ந்த 22,484 மகளிரும், ஆண்டிமடம் வட்டத்தைச் சேர்ந்த 22,935 மகளிரும் பயன்பெற்று வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக இன்றையதினம் வாலாஜாநகரம் ஊராட்சி, அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 6,217 மகளிருக்கு உரிமைத்தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

    இதில் அரியலூர் வட்டத்தை சேர்ந்த 1,830 மகளிரும், ஜெயங்கொண்டம் வட்டத்தைச் சேர்ந்த 2,279 மகளிரும், செந்துறை வட்டத்தைச் சேர்ந்த 1,059 மகளிரும், ஆண்டிமடம் வட்டத்தைச் சேர்ந்த 1,049 மகளிரும் பயன்பெற உள்ளனர்.

    இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×