search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    53 தனிநபர் கழிவறைகள் திறப்பு
    X

    53 தனிநபர் கழிவறைகள் திறப்பு

    • 53 தனிநபர் கழிவறைகள் திறக்கப்பட்டது
    • ராம்கோ சிமென்ட்ஸ் ஆலை சார்பில்

    அரியலூர்:

    ராம்கோ சிமெண்ட்ஸ், (கோவிந்தபுரம்), நிறுவனத்தின் நிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டு துறையின் நிதியின் மூலம் ரெட்டிபாளையம் ஊராட்சி, மு.புத்தூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 53 தனிநபர் கழிப்பறை மற்றும் குளியல் அறைவளாகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ. சின்னப்பா மற்றும் கிராமாலயா நிறுவனத்தின் நிறுவனர், பத்மஸ்ரீ தாமோதரன், ராம்கோ சிமெண்ட்ஸ் அரியலூர் ஆலைத்தலைவர் மதுசூதன் குல்கர்னி, மூத்த துணைதலைவர் (நிர்வாகம்) ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இது குறித்து ராம்கோ சிமென்ட்சின் அரியலூர் ஆலை தலைவர் மதுசூதன் குல்கர்னி கூறியதாவது:

    கடந்த நிதியாண்டின் (2020-21) ஆரம்பத்தில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தனது ஆலை மற்றும் சுரங்கப்பகுதிகளை சுற்றியுள்ள அமீனாபாத், நல்லாம்பத்தை, சின்னநாகலூர் மற்றும் மு.புதூர் ஆகிய 4 கிராமங்களில் 100 தனி நபர் நவீன கழிப்பறைகளுடன் கூடிய குளியலறைகளை கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்கள். மேலும், இந்த ஆண்டு கூடுதலாக 100 கழிவறைகளை மேற்கண்ட கிராமங்களில் கட்டிவருகிறது.

    இந்நிலையில், மு.புதூர் கிராமத்தில் மட்டும் இரண்டாண்டுகளில் 53 தனிநபர் கழிப்பறைகளை கட்டிமுடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளனர். நமது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ள ஸ்வச் பாரத் இயக்கத்தில், தி ராம்கோ சிமெண்ட்ஸ், கோவிந்தபுரம், அரியலூர் ஆலையின் "நிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டு துறை"-யின் மூலம் தனிப்பட்ட வீடுகளுக்கு நவீன கழிவறை கட்டிக் கொடுத்து வருகிறது.

    இவ்விழாவில், கிராம ஊராட்சி மன்ற தலைவர், பிரதிநிதிகள், அரசு அலுவலாக் ள், ராம்கோ சிமெண்ட்ஸ் அலுவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×