search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் கட்டிடத்தில் இயங்கும் அரசு கல்லூரி விடுதி
    X

    தனியார் கட்டிடத்தில் இயங்கும் அரசு கல்லூரி விடுதி

    • அரியலூரில் 3 ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் இயங்கும் அரசு கல்லூரி விடுதி
    • போதிய வசதி இல்லாததால் குறையும் மாணவர்கள் எண்ணிக்கை

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலைக்க ல்லூரி வளாகத்தில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல மாணவர்கள் விடுதி இயங்கி வந்தது.கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அந்த மாணவர் விடுதியை மாற்ற முடிவு செய்தனர்.அதை தொடர்ந்து அந்த விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எழு த்துக்காரன் பட்டியில் உள்ள பேரிக்காய் செந்துறை ரவுண்டானாவில் உள்ள தனியார் நல விடுதிக்கு மாற்றியுள்ளனர்.இந்த தனியார் விடுதி கல்லூரியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப் பால் உள்ளது. ஆகவே விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் தினமும் வெகு தூரம் நடந்து கல்லூ ரிக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் விடுதி மாணவர்களின் எண்ணி க்கையும் சரிந்து உள்ளது.இது ஒரு புறம் இருக்க தனியார் விடுதிக்கு மாதா ந்திர வாடகை கட்டணம் ரூ. 2 லட்சத்து 41 ஆயிரம் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படு கிறது.கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த பழைய விடுதியில் 165 மாணவர்கள் தங்கும் வசதி இருந்தது. ஆனால் தற்போது உள்ள தனியார் விடுதியில் 96 மாணவர்கள் மட்டுமே தங்கி உள்ளார்கள். புதியவர்க ளும் இந்த தனியார் விடுதி யை தவிர்க்கிறார்கள்.இது தொடர்பாக சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறும் போது,தனியார் கட்டிடத்தில் இயங்கும் நலவாழ்வு விடுதி கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை என்ற போர்வை யில் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.மாதா ந்திர வாடகை கூட சரியாக கொடுக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, விடுதியில் (கல்லூரி வளாகத்தில்) எப்பொழுதும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் கல்லூரிக்கும் விடுதிக்கும் இடையிலான தூரம் அதிக மாக இருப்பதால் மாண வர்கள் விடுதியில் தங்க விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள்

    விடுதி மாற்றப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் கடந்தும், புதிய நலவாழ்வு விடுதிக்கு இடம் தேர்வு செய்யாதது வருத்தம் அளி க்கிறது. கல்லூரி அருகே விடுதி கட்ட மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

    விடுதியில் தங்கி படிக்கும் 19 வயது மாணவி கூறுகை யில், கடந்த இரண்டு ஆண்டு களாக போதிய பஸ் வசதி இல்லாததால் நடந்தே கல்லூரிக்கு சென்று வருகி றேன். கல்லூரிக்கு வர குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் ஆகிறது என்றார்,மற்றொரு விடுதியாளர் கூறுகையில், "3 கட்டில் உள்ள ஒரு அறையை பத்து மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இத னால், இருவர் படு க்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இதுகுறித்து ஆதி திரா விடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை அதிகாரி விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டபோது, "புதிய கட்டிடம் (விடுதி) அமைக்க இடம் தேடி வருகிறோம்" என்று தெரிவித்தார். வாடகை பாக்கியில், "அரசாங்கம் பணம் கிடைத்ததும் நாங்கள் செலுத்துவோம்" என்றார்.

    Next Story
    ×